கடவுள் துகள்




குழந்தைகள் கோவத்தில்
தூக்கி எறிந்த பொருட்களை
பத்திரமாக
கவ்விக் கொண்டு வந்து சேர்க்கும்
அந்த வீட்டுக் குட்டிநாயின்
கள்ளமற்ற அன்பை போல
தவறாமல் இப்பொழுதும்
மெழுகுவர்த்திகளை ‘மட்டும்’
கொண்டு வரும்
தொலைதூரத்து உறவான
வேறு உறவுகளே இல்லாத பெரியம்மாவின்
வருகையை
அந்த நகரமும்
அந்த வீட்டாரும்
பொருட்படுத்துவதே இல்லையென
தெரிந்தும்
புறக்கணிப்புகளை மீறிய அன்பை செலுத்தும்
இந்த
‘பிரபஞ்சத்தின் கடவுள்துகளாக’ அவள்
வந்துக்கொண்டே இருக்கிறாள்.



Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :