Posts

Ante sundaraniki ஏன் சிறந்த கமர்ஷியல் படம்?

Image
  ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை நமது தென்னிந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் இருக்கும் ஆசைதான். அப்படிப்பட்ட ஆசைக் கொண்ட சிறுவன் சந்திக்கும் முதல் முயற்சியே ஆகப் பெரும் தோல்வியில் முடியும். இதனால் இனிமேல் அந்த முயற்சியே கூடாதெனும் அப்பா. ஆதரவு தெரிவித்த அம்மாவும் தவறாகிவிட்டதற்கு குற்றவுணர்வில் தத்தளிக்கும் கதாபாத்திரம். ஐயர் குடும்பம். கலாச்சாரம் அது இது என்று கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம். ஹீரோ ஆகிறேனென செய்த சேட்டைகளே அவனை கேலி செய்யவும் உதவுகிறது.  உண்மையில் ஒருவன் ஜெயிக்கும் முன்பு எதுவுமே பேசக்கூடாது. தோற்றுவிட்டால் அதுவே அவனை படுகுழியில் தள்ளிவிடும். அஞ்சான் லிங்குசாமி முதல் பீஸ்ட் நெல்சன் வரை பார்த்து விட்டோம்.  இப்படியாக நகைச்சுவையாக தொடங்கும் நானி கதாபாத்திரம் பிற்காலத்தில் ஹீரோ ஆனாரா இல்லையா என்பது மட்டுமே கதையல்ல. இந்த கதாபாத்திரம் வைத்துக்கொண்டு சகல மீறல்களையும் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர்.  ஏற்கனவே காதலித்து பிரிந்த ஹீரோயின். முதன் முறையாக காதலிக்கும் ஹீரோ. இதுவே தெலுங்கில் மிகப்பெரிய மீறல் தான். எவ்வளவு நாளைக்கு தான் ஆணின் காதலுக்கு பெண்கள் மருந்து போடுவார

இக்கால மாணவர்கள் : ஜெயமோகனும் எதிர் தரப்பினரும்

Image
  எவ்வளவோ பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கிறது எல்லோரது வாழ்க்கையிலும். இதில் இதை பேச வேண்டுமா? ஆமாம். வரும் தலைமுறையே நமது பள்ளி மாணவர்கள் தான். அவர்களை பற்றி பேசுவது நமது குழந்தைகளை பற்றி பேசுவது போல மிகவும் முக்கியமானது. இன்ஸ்டாகிராமில் தான் முதன் முதலாக ஜெயமோகன் அரசு பள்ளி மாணவர்களை இழிவாக பேசிவிட்டார் என்ற பதிவினை பார்த்தேன். அதை எழுதியவர் அழகிய பெரியவன். அவரது கதைகளையும் படித்துள்ளேன். இரண்டு முறை நேரில் சந்தித்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. அவரது பதிவு லிங்க் இங்கே . அதை படித்து விட்டு ஜெயமோகன் என்ன எழுதியுள்ளார் என்றும் பார்த்து  விடலாம் என்று பார்த்தேன். அதன் லிங்க் இங்கே . இரண்டையும் படித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும். ஜெயமோகனையும் வாசித்து இருக்கிறேன். முதலில் பெரும் ஈடுபாடு கொண்டு படித்து பின்னர் விலகியும் இருக்கிறேன். இருவரது கதைகள் பற்றி வேறொரு நாளில் கட்டுரை எழுத வேண்டும். சரி இப்போது இந்த பிரச்சினைக்கு வருவோம். ஜெயமோகன் அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே பார்ன் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். உண்மையில் எல்லோருமே  ( தனியார் பள்ளி மாணவர்கள் கூட ) பார்க்கிறார்கள் என்பது 💯 உ

Selfie Shalu எனும் வசீயக்காரி :

Image
  Dance பிடித்தவர்களுக்கு 100% செல்பி ஷாலுவை பிடிக்கும் என்பது எனது அபிப்பிராயம்.  Without Passion இப்படி எல்லாம் ஆடவே முடியாது. அப்படியென்ன பெரிய டேன்ஸரா என்று கேட்பவர்களுக்காக இந்த ரைட்டப்.  சிறந்த டேன்சருக்கான, கூகுள் ஆண்டவரிடம் விசாரித்ததில் கிடைத்த பொதுவான சிறப்பம்சங்கள்: body, action, space, time and energy.  நாம் பின்னிருந்து ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எனர்ஜி. செல்பி ஷாலுவிடம் அபாரமான எனர்ஜி இருக்கிறது. இதோ கீழே உள்ள பாடலை பாருங்கள். குட்டி ஜோதிகா | மினி ஜோதிகா | ஜோதிகா லைட் | ஜோதிகா தங்கச்சி என்று எத்தனை விதமாகவும் சொன்னாலும் அதே அர்த்தம் தான். அந்த அளவுக்கு நேர்த்தி. எனர்ஜி. கிரேஸ்.  நயன்தாராவுக்கு டான்ஸ் வராது. பிகில் படத்தில் நயன்தாரா கஷ்டப்பட்டு ஒரு டான்ஸ் ஆடியிருப்பார் விஜய்யுடன். அதில் ஆடத்தெரியாதவர்களின் சாயல் அப்படியே தெரியும். ஆடத்தெரியாமலும் அதை முயற்சி செய்யும் போதிலும் ஒரு அழகு தானாகவே வந்தடைந்திருக்கும் நயன்தாராவிடம் அந்த பாடலில். அதே  imperfections ஐ perfect ஆக அந்த அழகமைதி குறையாமல் ஷெல்பி ஷாலு தனது வீடியோவில் கொண்டு வந்திருப்பார்.  நான் எதுவும் அதிகமாக சொல்லவி

திராவிட அழகி

Image
  " கருப்பா  இருக்காளே ! இவளா ஹீரோயின்? " " ஆம்பள மாதிரி இருக்காளே " என்ற stereotype படுத்தப்பட்ட சமூகத்தில் பாலுமகேந்திரா ஆசைப்பட்ட திராவிட அழகை கொண்டு வந்ததுற்கு பா. ரஞ்சித்திற்கு  எவ்வளவு தூரம் நன்றி சொன்னாலும் தகும்.  சார்பட்டா படம் பற்றி சமூக வலைதளங்களில் ஏற்கனவே பலரும் எல்லா கோணங்களில் படத்தினை அலசி ஆராய்ந்து எழுதி எழுதி சலிக்க வைத்து விட்டனர். அதிலும் ரங்கன் வாத்தியார் அவரது மனைவியுடன் சில நொடி காதலை கூட சிலாகித்து விட்டனர் 😆. உண்மையில் இது தமிழ் சினிமாவில் ஒரு மைல்கள் என்றே சொல்லலாம். முக்கிய காரணம் அந்த கதாபாத்திரங்கள். தமிழில் இவ்வளவு துணை கதாபாத்திரங்களில் ( வேம்புலி, டேன்ஸிங் ரோஸ், டாடி, ரங்கன் வாத்தியார், வெற்றி, மாரியம்மாள், ரோஸியம்மா, மீரன், ராமன், மாஞ்சக்கண்ணன்,தணிகா,பீடி வாத்தியார்...) உயிர்ப்பு மிளிரியது மெட்ராஸ் படத்திற்கு பிறகு இதிலேதான். வடசென்னை யில் அத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் அது இந்த அளவுக்கு இல்லை. சார்பட்டா படம் எப்படி கமர்ஷியல் படம் எடுப்பதற்கான ஒரு பாடமாகவே வரும் காலங்களில் இருக்கும் என்பது என் கணிப்பு. மராத்தியில் Sairat படம் எப

தகப்பனை கண்டடைதல்

Image
துருக்கிய இயக்குனர் Nuri Bilge Ceylonனின் The Wild Pear Tree என்ற படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களுள் ஒன்று என்பது என் துணிபு. அதன் கரு தந்தையை கண்டடையதல்.  மாம்பழத்தின் கொட்டையை சுற்றி வளரும் சதைப்பகுதி போல படத்தின் கருவை சுற்றி இருக்கும் நிகழ்வுகள் மிகவும் ருசியானது. துருக்கியின் நிலப்பரப்பை அந்த நிலங்களின் மரங்களை காற்றினை நம் கண்களுக்கு முன்னால் இயக்குனரால் எளிமையாக காட்டிவிட முடிகிறது. லிட்ரலி நாம் அங்கு வசிக்க துவங்கி விடுகிறோம். Local is International என்ற வாக்கியத்தை நிறைவு செய்யும் படம். துருக்கியின் Nativityயை பார்த்தது போலவே இருந்தது. படத்தின் முக்கிய கதாபாத்திரம் கல்லுரியை முடித்து விட்டு ஆசிரியர் வேலைக்கு தேர்வு எழுத காத்திருக்கும் ஒருவன். கூடவே தான் எழுதிய நாவல் ஒன்றை பதிப்பிக்க பதிப்பகத்தாரை தேடித் திரிந்து கொண்டிருப்பான். அவ்வப்போது அவன் சந்திக்கும் மக்கள் அவர்களுடனான அவனது உரையாடல்கள் அனைத்துமே அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும். முன்னால் காதலியுடன் ஒரு எழுத்தாளருடன் நண்பர்களுடன் பதிப்பகத்தாருடன் என்று எல்லாமே மனதில் நிற்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.  எல்லா ஆ

அகாலம்

Image
இழவு வீட்டின் பிராதன ஊதுபத்தி வாசனை அந்த இடத்தை ஆக்கிரமித்து நெடுநேரமாகிறது. அதை அணையவிடாமல் மேலும் மேலும் எரியவைக்க ஒரு கூலியில்லா ஆளும் நியமிக்கப்பட்டிருந்தார். அழுது அழுது தொண்டை வற்றிப்போயி கோமதியம்மாள் நடையின் ஒரு மூலையில் சாய்ந்திருக்கிறாள். சில ஆட்களும் அதே கலைப்பில் அமைதியாக இருந்தனர். அந்த அமைதி சற்று பயங்கரமாக இருந்தது. நாங்கள் கொஞ்சம் தூரமாக ஒரு திண்ணையின் ஓரத்தில் இருந்தோம். எனக்கு அருகில் அமர்ந்திருந்த கோமதியம்மாளின் கணவர் ராமையாவுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்து அந்த கணத்தை குழைத்தது. அழைப்பை எடுத்ததும் ," ரே மாப்ள பின்னிகா ஃப்ளைட் எக்கி ராரா. சந்தோஷூ பாய்ல படி சச்சிபோயினாடுரா...." என்று தங்கள் மேல் குற்றமில்லை என்பதை அழுதுக்கொண்டே நிரூபிக்க போராடினார். மறுமுனையில் என்ன பேசினார் என்று தெரியவில்லை. அழைப்பை துண்டித்ததும் அவர் " ஞேனு ஏன்டிக்கு ஏடித்துதனே தெல்லேதுரா ஞைனா..." என்று எனது தோலை பிடித்தார்.  அழுது ஓய்ந்திருந்த கூட்டம் புத்துயிர்ப்பு அடைந்தது.  கோமதியம்மாளே ஆரம்பித்தாள். " ஐயோ... மா அல்லுடு ஒச்சி அடுக்குதுடே ஞேனு ஏமி செப்பேதி.. நா தெகிர உந்

ரூஹ் - லஷ்மி சரவணக்குமார்.

Image
விமர்சனம் என்பது நல்ல படைப்புகள் பற்றி மட்டுமே எழுதுவது என்ற குறுகிய பார்வை நிலவி வருகிறது. கட்டுரை போட்டிகளில் இதுவரை பரிசு பெற்ற கட்டுரைகள் எல்லாம் அந்த வகையிலே இருப்பது ஆரோக்கியமானதாக தோன்றவில்லை. எனது அனுபவம் கசப்பாகவே இருந்து வருகிறது.  விமர்சனம் என்பது எந்த படைப்பு பற்றியும் தனதளவில் நேர்மையான ஒன்றாக இருந்தால் போதும். மேலும் நல்ல படைப்பை விட சுமாரான படைப்புகளுக்கும் மோசமான படைப்புகளுக்கும் தான் விமர்சனங்கள் தேவைப்படுகிறது என்பது என்னுடைய திடமான கருத்து. ( அழிசி கட்டுரைப் போட்டி 2019 க்கு எழுதப்பட்டது. தேர்வாகும் தகுதியில்லை என்று முடிவு வெளியிடப்பட்டது 😂). விதிமுறைகளின் படி நான் எடுத்துக் கொண்ட நாவல் - ரூஹ். லட்சுமி சரவணகுமார் எழுதியது. அமேசான் கிண்டலில் கிடைக்கிறது. விலை ₹45 மட்டுமே. "தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே..". என்ற முன்னுரை தலைப்பிலேயே கதையின் மையத்தை ஆசிரியர் தெளிவு படுத்திவிடுகிறார். இது நாவலில் எவ்வாறு தொழிற்பட்டு இருக்கிறது என்பதை பார்ப்போம்.  ஆரம்ப நிகழ்வு நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழ