Posts

லேபிள் உலகம்

Image
Courtesy: pisasu film. அழகான குரலுடய சிறுமிகள் பெரும் புகழடைய மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த தகுதிகளில் முதன்மையானதும் அதி முக்கியமானதும் ஒன்றுண்டு அது அந்தச் சிறுமியின் விழியில் ஒளியில்லாததால் உண்டான "குருடி" எனும் லேபிளை. இரண்டாவது லேபிள் ஏழ்மையாகத்தான் இருக்க வேண்டும் மூன்றாவது லேபிள் அவளது உடல் வனப்பாக இருக்கலாம் இறுதியாக தான் அவளது ஆதார ஸ்ருதியான 'குரல்'வளமெனும் லேபிள். இந்த கவிதையில் கூட சிறுமி என்ற லேபிள் தான் பலசாலி சிறுவன் வந்திருந்தால் நோஞ்சானாயிருக்கும்.

தேகம் - சாரு நிவேதிதா

Image
இலக்கியத்தில் சுவாரஸ்ய போலிகளை கண்டறிதல் என்பது ஆரம்பக்கட்ட வாசகர்களுக்கு சற்று சவாலான விஷயம். சில ஜிகினாக்கல் கொண்டு எளிதாக ஏமாற்றிவிடும் விற்பன்னர்கள் அதிகம். தமிழில் இதற்கு உதாரணம் சாரு நிவேதிதா. அவரது தேகம் நாவலை இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம். அதிர்ச்சி தரும் விஷயங்களை அடிக்கிக்கொண்டே போவதும் பாலியல் வறட்சியை எழுத்தில் கொட்டுவதும் தான் அவரது தாரக மந்திரம். அதுவும் அவரது சொந்த பராக்கிரமத்தை பறை சாற்றும் வரிகளே அதிகம். கதை என்று ஒன்று இருக்காமல் எழுதுவது அசோகமித்திரன் ஸ்டைல். அதை அடியொற்றி எழுதும் சாருநிவேதிதா தன்னையும் அசோகமித்திரனாக நினைத்துக் கொள்வது அபத்ததிற்கே அபத்தமாகும். அசோகமித்திரன் கதைகளில் கதாபாத்திரங்களின் வளர்ச்சி இருக்கும். ஜிகினா பூசாத எழுத்துக்கள் அசோகமித்திரனுடையது. சாருவின் கதாபாத்திரங்களின் வளர்ச்சி என்ற ஒன்று இருக்கவே இருக்காது. அவரது டையரியை கிழித்து கிழித்து நாவல், கட்டுரை என்ற பெயரில் எழுதி வருகிறார். கட்டுரைகளை கூட மன்னித்து விடலாம். நாவலை கொச்சைப்படுத்தும் இந்த பாணியை என்னவென்று சொல்வது. பத்தி எழுத்தாளர் என்பது எவ்வளவு பொருத்தம். வெங்காயத்தை உர...

இடையில் ஓடும் நதி - கூகி வா திவாங்கோ

Image
இது கிக்கியு மொழியில் எழுதப்பட்ட கென்ய நாவல் பிறகு ஆசிரியர் கூகிவா திவாங்கோவினாலே       (Ngũgĩ wa Thiong'o) ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. The river between என்று கூகிளில் தேடினால் கிடைக்கும். தமிழில் இரா.நடராசன் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலம் தெரியாத என்னைப் போன்ற தற்குறிகள் தமிழிலேயே படிக்கலாம். மொழிபெயர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் சாகித்யம் எனக்கு இல்லை என்றாலும் படிக்க நன்றாகவே இருந்தது.  கென்யாவின் பழங்குடி மக்களின் பற்றிய கதை. அந்த மக்களின் கலாச்சார வாழ்வியலை பேசுகிறது. கலாச்சாரம் என்பதே காலத்திற்கேற்ப மாறக்கூடிய ஒன்று. பழையன கழிந்து புதுமை புகுத்தலே மனித நாகரிகத்தின் வளர்ச்சி படிநிலையை காட்டுகிறது. அதனுடன் காலனித்துவ எதிர்ப்பு அரசியலை எவ்வாறு பின்னி பிணைந்து கொண்டு எழுதியுள்ளார் என்பது தான் இந்த நாவலை தட்டையான ஒன்றிலிருந்து பல பரிமாணங்கள் கொண்டுள்ள ஒன்றாக மாற்றியது எனலாம். ஆண்களின் பிறப்புறுப்பு முன்தோலை அகற்றும் பழக்கத்தையும் பெண்களின் க்ளிட்டோரிஸை கீறி விடும் அறுப்பு பழக்கத்தை கொண்ட பழமையான மக்களின் வாழ்வியல் அங்கு வரும் ஆங்க...

கொமோரா - லஷ்மி சரவணகுமார்

Image
ஆரம்பத்தில் நடந்த களேபரத்திற்கு பாதியிலேயே நிறுத்திவிட்டு இருந்த நாவலைத் தொடர சில அடியாட்களின் சத்தம் அதிகமாக இருப்பதும் அவர்கள் சொல்லுவதே உண்மை என்று பிரகடனம் செய்வதை புரிந்து கொள்ளத்தான். தன்னை நியாயவனாக கருதிக் கொள்ளும் எவரும் அந்த திரைப்படத்தை ( First they killed my father) பார்த்து விட்டு நாவலில் வரும் அந்த கம்போடியா குறிப்புகளை படிக்கலாம். சில அன்புக்கு அடிமை நான். அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன். அவரவர் நியாயம் வெளிப்படுவதை பார்த்தவாறே இருக்கிறேன். சரி. எனக்கு தெரிந்த உண்மையை சொல்ல வேண்டுமானால் கம்போடியா குறிப்புகள் எல்லாமே தேவையில்லாத திணிப்புகளாகவே தெரிந்தது. அந்த கதையை ஏன் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும் என்றே தெரியவில்லை. ஒரு பிரபலமான நகைச்சுவை டயலாக் போல ‘ அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்? நானா சம்பந்தம் படுத்திக்கிட்ட’ என்பது போலவே தெரிந்தது எனக்கு. அதைப் படிக்கும் போது ஒரு கட்டத்தில் மொழி கூட மெரினா போராட்டத்தின் போது வந்த வாட்சப் மேசஜ்களை போல பிரச்சாரத் தொணியை நினைவுப்படுத்தியது. சத்யா பற்றி இந்த நாவலுக்கு முன்னாடியே அவர் அடிக்கடி எழுதுவ...

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

Image
" பேர்யாழ் " என்ற கவிதைத் தொகுப்பு குளிர் காலத்தில்​ கனன்று கொண்டிருக்கும் தாயின் மார்பினில்  உறங்கும் பச்சிளங்குழந்தை போல ஒரு கதகதப்பை தந்தது. இது குளிர் காலத்தில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டான உவமை மட்டுமல்ல. தேவதேவன் கவிதைகள் என்னை குழந்தை போல கள்ளமற்ற மகிழ்ச்சி அடைய செய்தது. தேவதேவன் கவிதைகளை சாதாரணமான செடி, கொடி, மரங்கள் பற்றிய அழகியல் கவிதை என்று சுருக்கி விட முடியாது. புத்தன்/ லாவேட்சு/ ஓஷோ கவிதை எழுதியது போல ஒவ்வொரு கவிதையிலும் அதன் ஞானச்சிதறல்கள் பட்டுத் தெறித்து உன்மத்தம் அடைகிறது. ஒவ்வொரு கவிதையும் பேரானந்தம். தமிழில் ஜென் கவிதைகள் ஒன்று உண்டெனில் அதில் இந்த தொகுப்பிற்கு முக்கியமான பங்கு வகிக்கும் என நம்புகிறேன்.  புரட்சி என்பது அகவயமானது என நம்புகிறேன். செயலின் ஊற்றுக்கண்ணான சிந்தனையை பாதிப்பதே எழுத்தின் முக்கியமான தொழிலாக நம்புகிறேன். இங்கு புரட்சியை புறவயமானது என்று பலர் நினைக்கக்கூடும். அது பகுத்தறிவோடு நின்று விடும். அதற்கு மேல் பயணிக்க வேண்டும் என்றால் நாம் உட்புறமாக திரும்பிச் செல்ல வேண்டும். தேவதேவன் கவிதைகள் அனைத்தும் அவரது இதயத்திலிருந்து பு...

மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் - எம்.கே.மணி

Image
இலக்கியம் என்பது வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளாலும் மொழியை கையாளும் விதத்தாலும் மட்டுமே இலக்கியமாகிறது. வாழ்க்கையைச் சொல்லுங்கள். அதன் நுட்பங்களை. அதன் மீதான உங்கள் சொந்த அவதானிப்புகளை. உங்கள் மனதை ஆதாரமாக்கி வாழ்க்கையை விவரியுங்கள். இலக்கியம் எப்படி எப்படி வளர்ந்தாலும் கடைசியில் மானுட மனதைச் சிறப்பாகச் சொல்வதே இலக்கியம் என்ற விதியே எஞ்சி நிற்கிறது என ஜெயமோகன் ஒரு முறை எழுதியது நினைவுக்கு வருகிறது. மணி ஸாரின் ஒவ்வொரு கதையிலும் வரும் கதாபாத்திரங்கள் இந்த உலகம் அழியும் தருவாயிலும் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கும் உயிரும் சதையுமான கதாபாத்திரங்கள். ஆண் எப்படிப்பட்டவன் அவனது கண நேர உணர்ச்சிகளை கூட எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லியிருக்கிறார். “வர வர நீ ஏன்மணி ஸார் மாதிரி எழுதற. ஏன் எப்ப பாத்தாலும் அவரையே தூக்கி வெச்சி பேசர. யாரு இந்த மணி ஸார்? ஒருவேளை சர்காஸமா? கிண்டல் பண்றியா ?.”  ங்கோத்தா மணி ஸாருக்கு சொம்பு தூக்கறியானு மட்டும் தான் யாரும் ஓப்பனாக கேட்கவில்லை. ஒருவரை பாராட்டி பேசுவது கூட இப்படியான நிலைமைக்குத் தான் கொண்டுபோகும் என்று நினைக்கிறேன். அதனாலயே புத்தகம் வெளியீ...

பச்சை நரம்பு - அனோஜன் பாலகிருஷ்ணன்

Image
“எழுத்தாளனின் முதிர்ச்சி என்பது  வயதை சார்ந்தது அல்ல. அது வயதை தாண்டிய மனதின் முதிர்ச்சியை சார்ந்தது” என்று விமலாதித்த மாமல்லன் கி.ரா.பற்றி சொன்னது அப்படியே அனோஜனுக்கும் பொருந்தும். இந்த வயதில் அனோஜனின் மொழியும் பக்குவமும் பிரமிக்கத்தக்கது. அநேகமாக ஒத்த வயதுடைய எங்களை போன்றவர்களுக்கு அது பொறாமையாகதான் இருக்கும். அனோஜன் தனது காத்திரமான விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு படைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். விமர்சனங்கள் வைப்பவர்கள் அவ்வளவு காத்திரமாக படைப்புகளை எழுதுவதில்லை என்று அனோஜன் பற்றி யாரோயொருவர், ஒரு முறை எழுதியிருந்தது நியாபகம். அந்த லாஜிக்கில் எனக்குமே குழப்பம் இருப்பதால் அது பொய்யாக வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அனோஜனின் விமர்சனங்கள் மிக மிக முக்கியமான ஒன்றாகப் படுகிறது எனக்கு. அதை செம்மத்தியாகவே செய்தும் வருகிறார். அதற்கு அவரது வலைத்தளமே (www.annogenonline.com) சாட்சி. விமர்சனம் என்ற போர்வையில் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. (அது சினிமா ஆனாலும் சரி). வாசகர்களே அதை கன்னி மனதுடன் படித்து அனுபவிக்க வேண்டும் என்று நினைக்க...